பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் வருவதை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் நடவடிக்கையை ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் புதிய வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது.
பிரிட்டனில் பரவி வரும் புதிய கரோனா வைரஸ் அச்சத்தால் பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மன், கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் பிரட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனையடுத்து பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களையும் ரத்து செய்ய வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் மத்திய அரசை வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் தற்காலிகமாக டிசம்பர் 31-ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தநிலையில் நிலைமை இன்னமும் சீரடையாததால் பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு விமானங்கள் வருவதை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் நடவடிக்கையை ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
வணிகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
க்ரைம்
10 hours ago
சுற்றுச்சூழல்
10 hours ago
க்ரைம்
10 hours ago
இந்தியா
10 hours ago