இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸால் 23,950 பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியி்ட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,950 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,00,99,066 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 96,63,382 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,895 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.53 ஆக உள்ளது.
கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,89,240 ஆகக் குறைந்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கரோனா வைரஸால் நேற்று மட்டும் 333 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,46,444 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.
செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19-ம் தேதி ஒரு கோடியையும் கடந்துள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
36 secs ago
இந்தியா
9 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago