விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒழிக்க யாரேனும் முயன்றால் அரசியலில் இருந்து வெளியேறுவேன் என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 26-வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு அவர்களுடன் மீண்டும் பேசத் தயார் என்று அறிவித்துள்ளது.
ஏற்கெனவே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளில் முக்கியமானதாக குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்பதாகும்.
இதுகுறித்து நர்னால்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியதாவது:
''விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். உண்மையில் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது கடந்த காலத்தில் இருந்தது. அது இப்போது உள்ளது. அது எதிர்காலத்திலும் இருக்கும். புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று விவசாயிகளுக்கு நான் உறுதியளிக்கிறேன்.
யாராவது குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒழிக்க முயன்றால், நான் அரசியலை விட்டே வெளியேறுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இதில் விவசாயிகளுக்கு எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினேன். விவசாயிகளின் போராட்டத்திற்கு விவாதத்தின் மூலம் ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளேன்.
புதிய வேளாண் சட்ட விதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவசாயிகளுடன் பேசுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்''.
இவ்வாறு மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
உலகம்
8 hours ago
ஆன்மிகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago