சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் அருள்பாலித்தார் பத்மாவதி தாயார்

By செய்திப்பிரிவு

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் தாயார் எழுந்தருளினார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கரோனா பரவலை தடுக்கும் விதத்தில், இந்த ஆண்டு தாயாரின் திருவீதி உலா முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்தது.

அதன்படி, கோயிலுக்குள்ளேயே ஏகாந்தமாக தாயாரின் வாகன சேவை தினமும் நடத்தப்படுகிறது. நாளை 19-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் தாயார் ஏழுமலையான் அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள், தீப, தூப ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், இரவு சந்திரபிரபை வாகனத்தில் பத்மாவதி தாயார் காட்சியளித்து அருள்பாலித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்