பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையை நோக்கி நகர்ந்து வருகிறது.
அதேசமயம், தொடக்கத்தில் முன்னிலை வகித்த காங்கிரஸ், ஆர்ஜேடி இணைந்த மகா கூட்டணி தொடர்ந்து பின்தங்கி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்ட தகவலின்படி 243 தொகுதிகளில் 118 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் பெரும்பான்மைக்கு 4 இடங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதேசமயம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி 95 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பிஹாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மொத்தம் 243 தொகுதிகளில் 3,733க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 38 மாவட்டங்களில் உள்ள 55 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது.
தொடக்கத்தில் மகா கூட்டணி முன்னிலை வகித்த நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கடும் போட்டியளித்து, முன்னிலைக்கு வந்தது.
தொடக்கத்தில் இரு கூட்டணிகளுக்கும் இடையே குறைந்த இடங்கள் வேறுபாட்டுடன் சென்ற நிலையில் தற்போது 20 இடங்கள் முன்னிலையுடன் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
பாஜக 73 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி 46 இடங்களிலும் முன்னிலை பெற்று, 118 இடங்களில் முன்னிலையுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கிறது.
அதேசமயம் காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 61 இடங்களிலும் என மகா கூட்டணி 95 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ராகோபூர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார். தேஜஸ்வி சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் தொடக்கத்தில் முன்னிலை பெற்று பின்னர் பின்தங்கினார். தற்போது 17 ஆயிரம் வாக்குகளுடன் தேஜ் பிரதாப் முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜேடியு வேட்பாளர் ராஜ்குமார் ராய் 14,322 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்ற விகாஸ் இன்சான் கட்சி 6 இடங்களிலும், ஹெச்ஏஎம் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
மகா கூட்டணியில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (லெனினிஸ்ட்-மார்க்சிஸ்ட்) 14 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
லோக் ஜனசக்தி கட்சி 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அசாசுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தலா ஓரிடத்தில் முன்னிலை வகிக்கின்றன. 7 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
முன்னாள் முதல்வரும் ஹெச்ஏஎம் கட்சியின் தலைவருமான ஜித்தன் ராம் மாஞ்சி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சரத் யாதவ் மகள் சுபாஷினி, சத்ருஹன் சின்ஹாவின் மகன் லவ் சின்ஹா ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
4 mins ago
தமிழகம்
26 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago