கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் போக்கு நிலவுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் கோவிட் தொற்றில் இருந்து குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருதல், உயிரிழப்போரின் விகிதம் குறைவு, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைந்து வரும் போக்கு இந்தியாவில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்தியாவில் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை இன்றைக்கு 5,33,787 ஆக இருக்கிறது. மொத்த தொற்றுப் பாதிப்பில் சிகிச்சை பெற்றுவோரின் எண்ணிக்கை என்பது வெறும் 6.42 % மட்டும்தான்.
மொத்த குணம் அடைந்தோர் 76.5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள (76,56,478)நிலையில் சிகிச்சை பெறுவோரின் எணிக்கைக்கும், குணம் அடைவோரின் எண்ணிக்கைக்கும் இடையேயான வித்தியாசம் அதிகரித்திருக்கிறது. தேசிய அளவில் குணம் அடைவோர் விகிதம் 92% (92.09%)ஆக சாதனை அளவு எட்டப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 53,357 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 46,253 ஆக இருக்கிறது. நாட்டின் பரிசோதனை எண்ணிக்கை தொடர்ந்து சீராக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு ஒட்டுமொத்த பரிசோதனை 11.3 கோடிக்கு நெருக்கமாக இருக்கிறது. (11,29,98,959). கடந்த 24 மணி நேரத்தில் 12,09,609 பேருக்கு பரிசோதனை நடைபெற்றுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 514 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவின் உயிரிழப்பு விகிதம் 1.49% என்ற அளவில் தொடர்ந்து நீடிக்கிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago