3 மாதங்களுக்குப்பின் முதல் முறை: கரோனா தொற்று; 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைவு

By செய்திப்பிரிவு

புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 3 மாதங்களுக்குப்பின் முதல் முறையாக நடந்துள்ளது.

கரோனாவுக்கு எதிரான பேராட்டத்தில், இந்தியா, பல குறிப்பிடத்தக்க இலக்குகளை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 46,790 ஆக குறைந்தது. கடந்த 3 மாதத்தில், புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது இதுவே முதல் முறை. இதற்கு முன் கடந்த ஜூலை 28ம் தேதி அன்று, புதிதாக தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 47, 703 ஆக இருந்தது.

கோவிட் தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், இறப்பு வீதமும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

மற்றொரு சாதனையாக, சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 10%-க்கும் கீழ் குறைந்துள்ளது. நாட்டில் தற்போது கோவிட் பாதிப்பு 7.5 லட்சத்துக்கும் (7,48,538) கீழ் உள்ளது. இது மொத்த பாதிப்பில் 9.85%.

நாடு முழுவதும் கோவிட்-19 ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்னணி ஊழியர்களின் சுயநலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்பால் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67 லட்சத்தை(67,33,328) கடந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் குணடைந்தவர்களுக்கு இடையேயான வித்தியாசம் இன்று 59,84,790 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 69,720 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் வீதம் 88.63% மாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 587 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 2வது நாநளாக, உயிரிழந்தோர் எண்ணிக்கு 600க்கு கீழ் உள்ளது.

குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

45 mins ago

சுற்றுச்சூழல்

55 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

50 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்