துர்க்மெனிஸ்தான் அதிபர் குர்பங்குலி பெர்டிமுகமெதொவ், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை தொலைபேசி மூலம் இன்று தொடர்பு கொண்டார்.
வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகள் மூலம் இணைக்கப்பட்டுள்ள இரு நாடுகளுக்கிடையேயான சுமூகமான நட்புறவை இரு தலைவர்களும் அங்கீகரித்தனர். பல்வேறு துறைகளில் தொடர்ந்து நீடிக்கும் ஒத்துழைப்பை அவர்கள் திருப்தியுடன் குறிப்பிட்டனர்.
வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் இருக்கும் அதிக அளவிலான சாத்தியக்கூறுகளை ஒத்துக்கொண்ட தலைவர்கள், குறிப்பாக மருந்துகள் தொழிலில் இந்திய மற்றும் துர்க்மெனிய நிறுவனங்களுக்கிடையேயான வெற்றிகரமான கூட்டு குறித்து குறிப்பிட்டனர்.
துர்க்மெனிஸ்தான் அதிபரின் தொலைபேசி அழைப்புக்கும், இந்தியாவுடனான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான அவரது தனிப்பட்ட உறுதிக்கும் குடியரசுத் தலைவர் நன்றி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
27 mins ago
வணிகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
4 hours ago
சினிமா
4 hours ago