ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி; 2020- 21-ம் ஆண்டில் தமிழகத்துக்கு ரூ.3607 கோடி ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

ஊரக இந்தியாவுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பஞ்சாயத்துகளை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்தும் வகையில், இ-கிராம் ஸ்வராஜ் என்னும் ஒருங்கிணைந்த தளத்தை (https://egramswaraj.gov.in/) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிப்பதற்காகவும், மதிப்பிடுவதற்காகவும் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

2020-21-ஆம் ஆண்டில், சுமார் 2.43 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் தங்களது வளர்ச்சி திட்டத்தை இ-கிராம் ஸ்வராஜ் தளத்தில் இறுதி செய்துள்ளன. சுமார் 1.24 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் இந்த தளத்தின் ஆன்லைன் பரிவர்த்தனை வசதியின் மூலம் பரிவர்த்தனைகள் செய்துள்ளன.

28 மாநிலங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்க 15-வது நிதி ஆணையம் தன்னுடைய 2020-21-ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறியுள்ளது.

2020 ஜூன் 17 மற்றும் 2020 ஜூலை 15 ஆகிய தேதிகளில் தலா ரூபாய் 15187.50 கோடி நிதி அமைச்சகத்தால் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2020-21-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டுக்கான மொத்த ஒதுக்கீடு ரூபாய் 3607 கோடி ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்