கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களில் 60 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 94,000-க்கும் அதிகமானோர் குணமடைந்த நிலையில், மிக அதிக அளவிலான குணமடைதல்களை இந்தியா கண்டுள்ளது
தொடர்ந்து இரண்டு நாட்களாக தினமும் 94 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட் தொற்றில் இருந்து இந்தியாவில் குணமடைந்து வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 94,612 கரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 43 லட்சத்தை (43,03,043) கடந்துள்ளது. குணமடைதல் விகிதம் தற்போது 79.68 சதவீதமாக உள்ளது.
குணமடைந்தவர்களில் 60 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் உள்ளனர்.
23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்த நிலையில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 92,605 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 52 சதவீதம் பேர் ஐந்து மாநிலங்களை சேர்ந்தவர்கள் அவர்கள். அதிக குணமடைதல்களை கண்டு வரும் அதே ஐந்து மாநிலங்கள் தான் இவையும் ஆகும்.
20 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் (22.16%) மகாராஷ்டிராவில் இருந்து பதிவாகியுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் தலா 8 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
தமிழகம்
16 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
27 mins ago
இந்தியா
50 mins ago
விளையாட்டு
42 mins ago
இந்தியா
50 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago