இறுதிகட்டத்தில் 3 கரோனா தடுப்பு மருந்துகள்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் 3 கரோனா தடுப்பு மருந்துகளின் சோதனை இறுதிகட்டத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் அவர் அளித்த எழுத்துப் பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் மருந்து உற்பத்தி மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள் ளன. இதன்படி, மொத்தம் 30 மருந்துகள் விலங்கு களிடம் பரிசோதனை மற்றும் மனிதர்களிடம் பரிசோதனை என பல்வேறு கட்டங்களில் உள்ளன. இவற்றில் 3 மருந்துகள் மனிதர்களிடம் முதல், 2-ம் மற்றும் 3-ம் கட்ட பரிசோதனை என இறுதி கட்டத்தில் உள்ளன.

மேலும் 4 மருந்துகள் மனிதர்களுக்கு வழங்கி பரிசோதனை செய்வதற்கு முந்தைய (பிரீ கிளினிகல்) நிலை யில் உள்ளன. தடுப்பு மருந்து சந்தைக்கு வந் ததும் உற்பத்திக்கேற்ப நாடு முழுவதும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான விவகாரங்களை உயர்நிலை நிபுணர் குழு கவனிக்கும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

ஜோதிடம்

2 mins ago

ஜோதிடம்

55 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்