மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா கரோனா வைரஸால் கடந்த 2-ம் தேதி பாதிக்கப்பட்டார். குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்ற அமித் ஷா, கடந்த சில நாட்களுக்கு கரோனாவிலிருந்து குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடுத்த சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக அமித் ஷா ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக கடந்த 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு லேசான உடல் சோர்வும், உடல் வலியும் இருந்ததால் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் கரோனாவுக்குப் பிந்தைய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முழுமையாகக் குணமடைந்ததை தொடர்ந்து அமித் ஷா இன்று காலை 7 மணியளவில்
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்தநிலையில் அவர் நேற்று மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago