கோழிக்கோட்டில் மழையில் விமானம் சிக்கி விபத்து: 2 பேர் பலி

By செய்திப்பிரிவு

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கியது. இதில் விமானி உட்பட இரண்டு பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளுடன் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.

அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் விமானம் தரை இறங்கும் போது விபத்து ஏற்பட்டது. இரவு 7:38 மணியளவில் விபத்து ஏற்பட்டு உள்ளது.

மழை காரணமாக விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியபடி விலகிச் சென்று மோதியது. இதில் முன்பக்கம் விபத்துக்குள்ளானது. மேலும் லேசான அளவில் நொறுங்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர் மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் விரைந்து வந்தனர்.

விமானி உட்பட இரண்டு பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் விமானத்தின் முன் பகுதி 2 ஆக உடைந்ததாக தெரிகிறது. எனினும் விபத்துக்குள்ளான விமானம் அதிருஷ்டவசமாக தீ பிடித்து எரியவில்லை. இதனால் பெரும் விபத்தாக மாறி இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய பேரிடர் மீட்பு படையினரை உடனடியாக மீட்பு பணியில் ஈடுபடுமாறு பணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்