உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர்களின் மெய்நிகர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:
தொடக்கத்தில் இருந்தே கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா தரம்மிக்க நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த ஜனவரியில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்பாகவே மக்களுக்கு ஆலோசனைகளையும் கட்டுப்பாடுகளையும் வெளியிட்டது.
ஜனவரி 18 முதல், நாட்டின் 4 முக்கிய விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளை பரிசோதிக்கக் தொடங்கினோம். மார்ச் 6 முதல் அனைத்து பயணிகளும் பல்வேறு விமான நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டனர்.
இதையடுத்து மார்ச் 22 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய மற்றும் கடுமையான பொது முடக்கம் மார்ச் 25-ல் அமலுக்கு வந்தது.
இந்தியா, மக்கள் தொகை மிகுந்த நாடு. ஆனாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, கரோனா நோயாளிகள் இறப்பு எண்ணிக்கையை மிகக் குறைவாக வைத்திருக்க முடிந்தது. இவ்வாறு ஹர்ஷ் வர்தன் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
சினிமா
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
க்ரைம்
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
10 hours ago
கருத்துப் பேழை
9 hours ago