இந்தியாவில் கரோனா பாதிப்பு 7.42 லட்சமாக அதிகரிப்பு; குணமடைந்தோர் 4.50 லட்சத்துக்கும் மேல் அதிகரிப்பு: 6-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத் தொற்று

By பிடிஐ

இந்தியாவில் கரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 22 ஆயிரத்து 752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 482 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 6-வது நாளாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 42 ஆயிரத்து 417 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 830 ஆக உயர்ந்துள்ளது. அதன் சதவீதமும் 61.53 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்து 944 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 9,250 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,165 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,977 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,636 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 804 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 622 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 827 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 472 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 313 ஆகவும், ஹரியாணாவில் 279 ஆகவும், ஆந்திராவில் 252 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 416 பேரும், பஞ்சாப்பில் 175 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 143 பேரும், பிஹாரில் 104 பேரும், ஒடிசாவில் 42 பேரும், கேரளாவில் 27 பேரும், உத்தரகாண்டில் 43 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 22 பேரும், அசாமில் 14 பேரும், அருணாச்சலப் பிரதேசம் 2 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 12 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,18,558 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 594 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 71,116 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,02,831 பேராக அதிகரித்துள்ளது. 74,217 பேர் குணமடைந்துள்ளனர்.

4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 37,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,720 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 21,404 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 15,627 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 29,968 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 23,837 பேரும், ஆந்திராவில் 20,019 பேரும், பஞ்சாப்பில் 6,749 பேரும், தெலங்கானாவில் 27,612 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 8,931 பேர், கர்நாடகாவில் 26,815 பேர், ஹரியாணாவில் 17,999 பேர், பிஹாரில் 12,570 பேர், கேரளாவில் 5,894 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,452 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 10,097 பேர், சண்டிகரில் 494 பேர், ஜார்க்கண்டில் 2,996 பேர், திரிபுராவில் 1,704 பேர், அசாமில் 12,522 பேர், உத்தரகாண்டில் 3,230 பேர், சத்தீஸ்கரில் 3,415 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,083 பேர், லடாக்கில் 1,041 பேர், நாகாலாந்தில் 625 பேர், மேகாலயாவில் 80 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹாவேலியில் 405 பேர், புதுச்சேரியில் 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 434 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 197 பேர், சிக்கிமில் 125 பேர், மணிப்பூரில் 1,430 பேர், கோவாவில் 1,903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்