நாடுமுழுவதும் கரோனா பரிசோதனை; விரைவில் 1 கோடி எண்ணிக்கையை தொடும்

By செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பரிசோதனை எண்ணிக்கை, விரைவில் ஒரு கோடியை எட்ட உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நோய் கண்டறியும் சோதனைக்கான கட்டமைப்புகளை விரிவுபடுத்தி வருவதன் மூலம், இன்றைய தேதி வரை, 90,56,173 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 768 அரசு ஆய்வகங்கள் மற்றும் 297 ஆய்வகங்கள் உட்பட, நாடு முழுவதும் மொத்தம் 1065 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.

தினசரி பரிசோதனை எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும், 2,29,588 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான அனைத்து தடைகளையும் மத்திய அரசு அகற்றியதே இதற்குக் காரணம். மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள், கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதன் மூலம் நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பரிசோதனை எண்ணிக்கை, விரைவில் ஒரு கோடியை எட்டவுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

சுற்றுச்சூழல்

14 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

9 mins ago

விளையாட்டு

30 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்