மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொவிட்-19 நோயாளிகள் குணமடையும் விகிதம் 60 விழுக்காட்டை நோக்கி விரைகிறது.
இன்றைய நிலவரப்படி, கொவிட்-19 தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 1,32,912 அதிகமாகும்.
இது வரை 3,59,859 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது குணமடைந்தோர் எண்ணிக்கை 59.52 சதவீதத்தை எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 11,881 கொவிட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர்.
தற்போது 2,26,947 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
கொவிட்-19 தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 93,154 பேர் குணமடைந்துள்ளனர்.
அடுத்து டெல்லியில் 59,992 பேர் குணமடைந்துள்ளனர். 52,926 பேர் தமிழ்நாட்டில் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இந்தியாவில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
குணமடைந்தோர் விகிதத்தைப் பொறுத்தவரை சண்டிகர் (82.3%) முதல் இடத்திலும், மேகாலயா (80.8%) இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் (79.6%) மூன்றாம் இடத்திலும் உள்ளன.
கொவிட்டை கண்டறியும் பரிசோதனைச் சாலைகளை அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது 1065, கொவிட்-19 பரிசோதனைச் சாலைகள் நம் நாட்டில் உள்ளன.. இதில் அரசு பரிசோதனைச் சாலைகள் 768, தனியார் பரிசோதனைச் சாலைகள் 297.
· நிகழ்நேர பிசிஆர் (Real Time – RT PCR) அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 578 (அரசு : 366 + தனியார் : 212),· ட்ரூனேட் (TrueNat) அடிப்படையிலானச் சோதனைச் சாலைகள் – 398 (அரசு : 370 + தனியார் : 28)· CBNAAT அடிப்படையிலான சோதனைச் சாலைகள் – 89 (அரசு : 32 + தனியார் : 57) ஆகும்.
பரிசோதனை செய்வதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,29,588 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 90,56,173 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago