மெக்காவில் பலியான தம்பதி குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

By பிடிஐ

ஹஜ் புனித யாத்திரையின்போது உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தம்பதியின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் நேற்று ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மெக்காவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில், நம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் காதர் மற்றும் அவரது மனைவி பாத்திமா பேகம் ஆகிய 2 பேர் பலியாயினர். இவர்கள் இருவருக்கும் தலா ரூ.3 லட்சத் துக்கான காசோலையை குடும்பத்தி னரிடம் முதல்வர் வழங்கினார்.

மேலும், அப்துல் காதரின் பிள்ளைகளுக்கான கல்விச் செலவை அரசு ஏற்பதுடன் அவர் களுக்கு ஒரு வீட்டு மனை ஒதுக்கப் படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. இதற்கிடையே, லிபியாவில் கடத்தப்பட்ட ஆந்திரா வைச் சேர்ந்த டாக்டர் கோசனம் ராமமூர்த்தியின் குடும்பத்தினர் முதல்வரை சந்தித்து, அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

அவரை மீட்க மாநில அரசும் மத்திய வெளியுறவு அமைச்சகமும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாநில செய்தி மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர் நலத் துறை அமைச்சர் பல்லே ரகுநாத ரெட்டி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்