ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புப்படி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூகக் கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4-ம் கட்டமாக மே 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.
பின்னர் ஜூன மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என கர்நாடகா, ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் அறிவித்துள்ளன. அதுபோலவே மால்கள் உள்ளிட்ட வணிக வளாகங்களைத் திறக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. இதுபோலவே பஞ்சாப் உட்பட வேறு சில மாநிலங்களும் வழிபாட்டுத் தலங்களை திறக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
முக்கிய செய்திகள்
வணிகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
4 hours ago