167 ஆண்டுகளில் முதல் முறை: கருப்பு நிற கோட், டை இல்லாமல் பணி செய்யும் ரயில் டிக்கெட் பரிசோதகர்கள்; புதிய விதிமுறைகள் வெளியீடு

By பிடிஐ

167 ஆண்டு கால ரயில்வே வரலாற்றில், முதல் முறையாக ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் வழக்கமாக அணியும் கருப்பு நிற கோட், டை இல்லாமல் ஜூன் 1-ம் தேதி முதல் பணியாற்றப்போகிறார்கள்.

கரோனா வைரஸ் தீவிரமடைந்திருக்கும் இந்த நேரத்தில் பணியாற்றும் அவர்களுக்காக பிரத்தேய பிபிஇ உடை, டிக்கெட்டுகள், பெரிதாகக் காட்டும் கண்ணாடி போன்றவற்றை ரயில்வே வழங்க உள்ளது.

வரும் ஜூன் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் 100 ஜோடி சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்க உள்ளது. கரோனா வைரஸ் லாக்டவுனிலிருந்து மக்களை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவரும் நோக்கில் ரயில் போக்குவரத்தை மத்திய அரசு தொடங்குகிறது.

இதுவரை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ஷ்ராமிக் ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்களுக்குப் பணியில்லை . ஆனால், ஜூன் 1-ம் தேதி முதல் இயக்கப்படும் ரயில்களில் மீண்டும் டிக்கெட் பரிசோதகர்கள் பணி செய்ய உள்ளனர்.

இந்த சிறப்பு 200 ரயில்களில் பணியாற்றும் டிக்கெட் பரிசோதகர்களுக்கான வழிகாட்டி விதிமுறைகளை ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

ஜோதிடம்

56 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்