ஆந்திராவில் நாளை முதல் பேருந்து போக்குவரத்து தொடக்கம்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது. பல மாநிலங்களில் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் போக்குவரத்து, கடைகள் திறப்பு என பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் ஆந்திராவில் நாளை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநில போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் மடிரெட்டி பிரதாப் கூறுகையில் ‘‘434 வழித்தடங்களில் மொத்தம் 1683 பேருந்துகள் இயக்கப்படும்.

கரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் மட்டுமே முதல்கட்டமாக பேருந்து போக்குவரத்து செயல்படும். தொடர்ந்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பயணிகள் முககவசம் அணிந்து சமூகவிலக்கலுடன் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்