உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு செய்திவிடுத்துள்ள மேற்குவ்ங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஊடகவியலாளர்கள் அச்சமின்றி தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று சர்வதேச பத்திரிகை சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படுவதற்கான உறுதிப்பாட்டை அரசாங்கங்கள் மதிக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் மே 3 ஐ உலக பத்திரிகை சுதந்திர தினமாக அல்லது உலக பத்திரிகை தினமாக அறிவித்துள்ளது.
மே 3 விண்ட்ஹோக் பிரகடனத்தின் ஆண்டு நிறைவையும் குறிக்கிறது, இது 1991 இல் வின்ட்ஹோக்கில் ஆப்பிரிக்க செய்தித்தாள் பத்திரிகையாளர்களால் ஒன்றிணைக்கப்பட்ட சுதந்திரமான பத்திரிகைக் கொள்கைகளின் அறிக்கையாகும்.
சர்வதேச பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஜனநாயகத்தில் பத்திரிகைகளின் பங்கைப் பாராட்டுக்குரிய ஒன்று ஆகும். #PressFreedomDay பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட முன்னணி கோவிட் -19 தொழிலாளர்கள் பலருக்கும் மேற்கு வங்க அரசு ரூ .10 லட்சம் வரை சுகாதார காப்பீட்டை அறிவித்துள்ளது. பத்திரிகை ஒரு ஜனநாயகத்தின் நான்காவது தூணாகும், அதன் கடமைகளை அச்சமின்றி செயலாற்ற வேண்டும். ஊடகவியலாளர்கள் சமூகத்திற்கு அவர்கள் செய்த பங்களிப்புக்காக நாங்கள் அவர்களை மதிக்கிறோம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
35 mins ago
இந்தியா
29 mins ago
தமிழகம்
46 mins ago
வாழ்வியல்
37 mins ago
இந்தியா
51 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago