சிவப்பு மற்றும் ஆரஞ்சு மாவட்ட பகுதிகளில் கூடுதல் கவனம் தேவை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பு வாரியாக குறிப்பிடப்படும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு மாவட்ட பகுதிகளில் மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் லாவ் அகர்வால் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் பரவும் வேகம் குறைவாகவே உள்ளது. நோய் தொற்று சங்கிலியை உடைப்பது பெரிய சவாலாக உள்ளது. இதற்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு மாவட்ட பகுதிகளை மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35,043 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1993 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8889 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1147- ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்