மகாராஷ்ட்ராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் கடந்த ஆண்டு நவம்பரி முடிவுக்கு வந்த போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.
சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே கடும் சர்ச்சைகளுக்கு இடையே முதல்வர் பொறுப்பை ஏற்றார். அவர் எம்.எல்.ஏ.ஆகவோ, எம்.எல்.சி.யாகவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் சட்டப்படி முதல்வராக நீடிக்க வேண்டுமெனில் அவர் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.ஆகவோ எம்.எல்.சி.ஆகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வரும் மே மாதம் 27ம் தேதியுடன் உத்தவ் தாக்கரே பதவியேற்று 6 மாதங்கள் நிறைவடைகிறது. இந்நிலையில் எம்.எல்.ஏ.ஆகவோ, எம்.எல்.சியாகவே இல்லாத உத்தவ் தாக்கரே பதவி நீடிப்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்ட்ராவில் காலியாக உள்ள 9 எம்.எல்.சி. இடங்களுக்கு கடந்த 24ம் தேதி தேர்தல் நடப்பதாக இருந்தது. இதில் போட்டியிட்டு எம்.எல்.சியாக உத்தவ் திட்டமிட்டிருந்தார் ஆனால் கரோனாவினால் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி மும்பையில் நடந்த மகாராஷ்ட்ரா அமைச்சரவைக் கூட்டத்தில் மாநில கவர்னருக்கான 2 எம்.எல்.சி இடங்கள் ஒதுக்கீட்டில் ஒரு இடத்தில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க வேண்டும் என கவர்னர் கோஷ்யாரிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக கவர்னர் இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. இதனையடுத்து கவர்னர் கோஷ்யாரியை துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் சில அமைச்சர்கள் சந்தித்து உத்தவ் தாக்கரேயை எம்.எல்.சியாக நியமிக்க கோரிக்கை விடுத்தனர், ஆனால் கவர்னர் எந்த உறுதியையும் அளித்ததாகத் தெரியவில்லை.
இதனையடுத்து உத்தவ்வை எம்.எல்.சி.ஆக தேர்வு செய்ய கவர்னருக்கு இரண்டாவது முறையாகப் பரிந்துரைத்துள்ளது.
கவர்னர் இது தொடர்பாக முடிவெடுக்கவில்லை எனில் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிடும்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
10 mins ago
சினிமா
15 mins ago
இந்தியா
36 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago