ஒருபக்கம் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதற்கு அதிகமான நிதி தேவைப்படுகிறது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனாவசியச் செலவுகளைச் செய்து வருகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புப்படி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக் கூட்டங்கள், சமூகக் கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ''ஒருபக்கம் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதற்கு அதிகமான நிதி தேவைப்படுகிறது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனாவசியச் செலவுகளைச் செய்து வருகிறது.
புல்லட் ரயிலுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது. இதுபோன்ற திட்டங்களை நிறுத்த வேணடும். அரசு தனது செலவுகளை 30 சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டும். அரசு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு செய்வதற்குப் பதிலாக இதுபோன்ற நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
இந்தியா
3 mins ago
தமிழகம்
20 mins ago
வாழ்வியல்
11 mins ago
இந்தியா
25 mins ago
தமிழகம்
46 mins ago
சினிமா
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago