பகுதியைக் குறிப்பிட்டு 15 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக  ‘போலி தகவல்’- கொல்கத்தாவில் பெண் கைது

By பிடிஐ

வாட்ஸ் அப் செயலியில் கரோனா வைரஸ் பரவல் குறித்த போலி தகவலைப் பரப்பியதற்காக பெண் ஒருவரைக் கைது செய்ததாக கொல்கத்தா நியு அலிபூர் பகுதி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் தன் வாட்ஸ் அப் பதிவில் நியு அலிபூர் பகுதியில் 15 பேருக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது என்றும் இதனை மாநில அரசு மறுக்கிறது என்றும் பதிவிட்டிருந்ததாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

30 வயதுக்கும் சற்று கூடுதலான இந்தப் பெண்மணி ஞாயிறன்று கைது செய்யப்பட்டார், அதே பகுதியிலிருந்து சிலர் இந்தப் பெண் குறித்து நியு அலிப்பூர் போலீசாரிடம் புகார் பதிவு செய்ய அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் தனது பதிவுக்கு ஆதாரமாக எதையும் காட்ட முடியவில்லை. இதனையடுத்து இவரைக் கைது செய்ததோடு வாட்ஸ் அப் குழுமத்திடம் இவரது தகவலை நீக்கிவிடவும் கோரப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

சினிமா

11 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

9 mins ago

சினிமா

27 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

21 mins ago

சினிமா

32 mins ago

சினிமா

35 mins ago

வலைஞர் பக்கம்

39 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

49 mins ago

மேலும்