கரோனா வைரஸின் தாக்கம், இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் அந்த நோய்க்கான உயிரிழப்பு 17 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 724 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காலை 9.15 மணி நிலவரப்படி மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். குஜராத் மாநிலத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் 2 பேரும், மத்தியப் பிரதேசம், தமிழகம், பிஹார், பஞ்சாப், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
புள்ளிவிவரங்கள்படி நாட்டில் மொத்தம் 640 பேர் கரோனா வைரஸால் பாதி்க்கப்பட்டுள்ளனர். 66 பேர் கரோனா நோயினால் குணமடைந்து சென்றுள்ளனர். ஒருவர் இடம் பெயர்ந்துள்ளார், ஆனால், ஒட்டுமொத்தமாக 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 47 பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் வெளிநாட்டினர்.
கர்நாடக மாநிலத்தில் 55 பேரும், தெலங்கானாவில் 10 வெளிநாட்டினர் உள்பட 44 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 43 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் 41 பேரும் பாதிக்கப்பட்டுள்னர்.
சண்டிகர் மாநிலத்தில் 7 பேரும், சத்தீஸ்கர், பிஹார் மாநிலத்தில் 6 பேரும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 5 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்
புதுச்சேரி, மிசோரம், மணிப்பூர், அந்தமான் நிகோபர் தீவு ஆகியவற்றில் தலா ஒருவர் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago