நாட்டிலேயே மிகப்பெரிய கரோனா மருத்துவமனை: தயார் செய்கிறது ஒடிசா

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக 1000 படுக்கைகளுடன் நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனையை ஒடிசா அரசு தயார் செய்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் உட்பட சுகாதாரத்துறை பணியாளர்கள் அனைவரும் இரவும் பகலும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதாலும், கரோனா தொற்று குறித்த சோதனையாலும் கூடுதலாக மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்தநிலையில் நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனையை ஒடிசா அரசு தயார் செய்து வருகிறது. இந்த மருத்துவமனையில் 1000 படுக்கைகளுடன் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். அடுத்த 15 நாட்களில் இந்த மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது.

ஒடிசா அரசு, தனியார், மருத்துவக்கல்லூரிகள் இணைந்து இந்த மருத்துவமனையை உருவாக்குகின்றன. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

வலைஞர் பக்கம்

25 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

31 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்