காணொலியில் சிகிச்சை: எய்ம்ஸ் மருத்துவமனை முடிவு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முக்கிய நோயாளிகளுக்கு காணொலிக் காட்சி மூலம் மருத்துவர்கள் மருத்து பரிந்துரைகள் அளிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை.

இந்தநிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முக்கிய நோயாளிகளுக்கு காணொலிக் காட்சி மூலம் மருத்துவர்கள் மருத்து பரிந்துரைகள் அளிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர் ரண்தீப் குளேரியா கூறியதாவது:
மருத்துவ சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை. இருப்பினும் கரோனா தொற்று இருப்பவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதால் அங்கு வர மற்ற நோயாளிகள் அச்சப்படுகின்றனர். ஆனால் முக்கிய நோய்கள் பலவற்றிக்கும் மக்கள் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

எனவே ஆன்லைன் மூலமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம். காணொலிக் காட்சியில் இணைந்து நோயாளிகள் மருத்துவர்களை அணுகலாம். அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். இதனால் மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அலைய வேண்டிய கட்டாயம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

9 mins ago

தமிழகம்

26 mins ago

வாழ்வியல்

17 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

52 mins ago

சினிமா

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்