ஊரடங்கு என்பது வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம், ஆனால் 21 நாட்கள் என்பது மிக நீண்டகாலம். இந்த ஊரடங்கிற்கு பின்னால் ஒருவர் தகுந்த விலை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் எச்சரித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்பு படி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘ஊரடங்கு என்பது வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம். ஆனால் 21 நாட்கள் என்பது மிக நீண்டகாலம். இந்த ஊரடங்கிற்கு பின்னால் ஒருவர் தகுந்த விலை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
கரோனாவை எதிர்கொள்ள சரியான முறையில் தயாராகவில்லை. ஏழைகளை பாதுகாக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நமக்கு முன்னால் மிக கடுமையான நாட்கள் உள்ளன’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
வணிகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
4 hours ago