லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் உண்மைகளை மறைக்கிறார் சுஷ்மா: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

‘‘லலித் மோடி விவகாரத்தில் முக்கிய உண்மைகளை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைக்கிறார். உண்மைகளுக்கு பதில் வெற்று பேச்சுதான் பதிலாக வந்துள்ளது’’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

டெல்லியில் நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ப.சிதம்பரம் கூறியதாவது:

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் முக்கிய உண்மைகளை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைக்கிறார். காங்கிரஸ் கேட்ட கேள்விகளுக்கு, உண்மையை சொல்வதற்கு பதில் வெற்று பேச்சுதான் பேசியிருக்கிறார் சுஷ்மா.

லலித் மோடிக்கு மனிதாபிமான வகையில் உதவி செய்ய சுஷ்மா விரும்பி இருந்தால், போர்ச்சுக்கல் நாட்டுக்கு மட்டும் சென்று வரும் வகையில் பிரிட்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனர் அலுவலகத்தில் தற்காலிக பயண ஆவணங்கள் கேட்டு விண்ணப்பிக்க லலித் மோடியிடம் சொல்லி இருக் கலாம்.

இந்திய ஆவணங்களுக்குப் பதில் லலித் மோடிக்கு பிரிட்டன் ஆவணங்கள்தான் தேவை என்று சுஷ்மா ஏன் நினைத்தார். எனவே, இதில் அரசு எதையோ மறைக்கிறது. இதுகுறித்து விவாதம் நடத்துவதற்கு பதில் சுஷ்மா நீண்ட பிரசங்கம்தான் செய் தார். உண்மைக்கு பதில் நாடாளு மன்றத்தில் பெரிய உரைதான் நிகழ்த்தினார். எதிர்க்கட்சிகள் மீது குற்றங்களைதான் அடுக்கினார்.

லலித் மோடி விவகாரத்தில் உண்மையை சொல்வதற்கு பதில், வெற்று பேச்சுகளைதான் சுஷ்மா பேசினார்.

காங்கிரஸ் கட்சி கேட்ட முக்கிய கேள்விகளை விட்டுவிட்டு மற்ற எல்லாவற்றையும் ஆளும் பாஜக செய்தது. மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி பொய்யான தகவல்களை நாடாளுமன்றத்தில் சுஷ்மா கூறியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மாவிடம் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 secs ago

சினிமா

9 mins ago

சினிமா

12 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

10 mins ago

சினிமா

28 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

22 mins ago

சினிமா

33 mins ago

சினிமா

36 mins ago

வலைஞர் பக்கம்

40 mins ago

சினிமா

45 mins ago

மேலும்