மூத்த தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்ட்ரா அமைச்சருமான நவாப் மாலிக் டெல்லியில் பாஜக தோல்வியை கேலி செய்யும் விதமாகக் கூறிய போது மக்கள் பாஜக தலைவர்கள் கூறியதற்கேற்ப தேசவிரோதிகளுக்கு வாக்களிக்கவில்லை என்றார்.
டெல்லி தேர்தல் வாக்கெண்ணிக்கையில் இன்று அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது, இது பாஜகவுக்கு பெரிய அடி என்று பலரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் என்சிபி தலைவர் நவாப் மாலிக் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “பிரதமர் நரேந்திர மோடியும் பிற பாஜக தலைவர்களும் டெல்லி மக்களிடம் தேச விரோதிகளுக்கு வாக்களிக்காதீர்கள் என்று முறையிட்டார்கள், மக்கள் அதை அப்படியே கேட்டு ஆம் ஆத்மிக்கு வாக்களித்து விட்டனர்.
பாஜகவின் வெறுப்பு அரசியல் மீது மக்கள் சோர்வடைந்து விட்டனர். பாஜக எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குத் தொடர்ந்தனர், ஆம் ஆத்மி தொண்டர்களை முடக்க ஏகப்பட்ட விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் பாவம் பாஜகவுக்குச் சாதகமாக எதுவும் அங்கு அமையவில்லை.
நாங்களே ஆம் ஆத்மியுடன் டெல்லி தேர்தலில் கூட்டணி வைக்க அவர்களை அணுகினோம், காங்கிரஸ் கட்சியும் கூட எதிர்காலத்தில் வாக்குகள் பிரியாமல் இருக்க கூட்டணியையே யோசிக்க வேண்டும்” என்றார் நவாப் மாலிக்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
க்ரைம்
6 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago