புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை திருநங்கைகளுடன் ஒப்பிட்டு பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான் சசிதரூர் மன்னிப்பு கோரியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் திங்கட்கிழமை கலந்து கொண்ட சசிதரூர், ‘‘குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தீவிரம் காட்டவில்லை. கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறவில்லை. பொறுப்பில்லாத அதிகாரத்தைத்தான் அவர் விரும்புகிறார்’’ என்று கூறி திருநங்கைகளோடு ஒப்பிட்டு கருத்து கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருநங்கைகளை சசிதரூர் அவமதித்து விட்டதாகவும் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து, ட்விட்டரில் கருத்து தெரிவித்த சசிதரூர், ‘‘திருநங்கைகளை நான் தவறாகப் பேசவில்லை. இங்கிலாந்து அரசியலில் பயன்படுத்தப்பட்ட பழமையான மேற்கோளை உதாரணம் காட்டினேன். பழமையான அந்த மேற்கோள் இப்போது பொருத்தமற்றது என்பதை உணர்ந்து அதை திரும்பப் பெறுகிறேன். எனது கருத்துக்காக மன்னிப்பு கோருகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
12 hours ago
வலைஞர் பக்கம்
13 hours ago