குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என ராகுல் காந்தி அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் துணைத் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பல மாநிலங்களில் அரசியல்கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதுபற்றி ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் துணைத் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் கூறுகையில் ‘‘குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் முதல்வர்களே நேரடியாக தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்துகின்றனர். மற்ற மாநில முதல்வர்களை போல காங்கிரஸ் முதல்வர்கள் தெருவில் இறங்கி போராட தயக்கம் காட்டுகின்றனர்’’ எனக் கூறியுள்ளார்.
இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் மீண்டும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இறுதியாக ராகுல் காந்தி கலந்து கொண்டு விட்டார். இதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேசமயம் குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என ராகுல் காந்தி அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். மாநில முதல்வர்கள் அறிவித்து விட்டார்கள் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால் இதனை காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அக்கட்சி மக்களை குழப்பக் கூடாது’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
வணிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago