வரும் ஞாயிறு நள்ளிரவு வரை மங்களூரு நகருக்குள் நுழைய தடை விதித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கு கர்நாடாக போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் மங்களூரு மாவட்டத்தில் நேற்றுமுன் தினம் நடந்த கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கப்போவதாக சித்தராமையா அறிவித்திருந்தார். இந்நிலையில், மங்களூரு காவல் ஆணையர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், சித்தராமையா மங்களூருவுக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நேரும் எனக் குறிப்பிட்டு வரும் ஞாயிறு இரவு வரை அவர் மங்களூருவுக்குள் நுழைய தடை விதித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
வலைஞர் பக்கம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago