ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்றார் என்ற சந்தேகத்தின் பேரில், மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
ஜுபையிர் கான் என்று அடையாளம் காணப்பட்ட அந்தப் பத்திரிகையாளர் குறித்து இராக் துணைத் தூதரகம் அளித்த தகவலை அடுத்து டெல்லி போலீஸார் அவரை கைது செய்தனர்.
போலீஸார் தகவலின்படி, இராக்கில் செயல்படும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேரும் நோக்கத்தோடு இராக் துணைத் தூதரகத்தில் விசா பெற அந்த நபர் முயற்சித்ததாக தெரிகிறது.
கைது செய்யப்பட்ட நபரிடம் டெல்லி போலீஸாரும் சிறப்புப் புலனாய்வு போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஜுபைருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இல்லை என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக தெரிவித்தாகவும் போலீஸார் தகவலில் குறிப்பிடப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
58 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
2 hours ago