கலை சேவையைப் பாராட்டி கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வழங்கினார்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகம் சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் கலை சேவையைப் பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற கமல்ஹாசனுக்கு, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
இதுதொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு நன்றி தெரிவித்து, கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘உங்களுடைய சிறந்த விருந்தோம்பலுக்கும், அன்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒடிசா மாநிலத்தின் தற்போதைய வருகை மற்றும் நம்மிடையேயான உரையாடலை எப்போதும் போற்றுவேன். உங்களிடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய உள்ளது. அதை, என்னுடைய தமிழகத்தில் நிறைவேற்றுவேன். ஒடிசா உங்களுடைய கையில் புதையலைப் போல உள்ளது. என்னுடைய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
உலகம்
11 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago