உ.பி.யில் சுவர் இடிந்து 8 பேர் பரிதாப பலி

By பிடிஐ

உத்திரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில் உள்ள அட்டாரா எனும் பகுதியில், நேற்று முன்தினம் ஒரு வீட்டின் சுவர் இடிந்து 8 பேர் பலியாயினர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

பலியானவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குவர். நேற்று முன்தினம் இரவு சிதிலமடைந்த அந்த வீட்டின் வெளியே சிலர் அமர்ந்திருந்தனர். அப்போது சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. அதில் 8 பேர் பலியாயினர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

இறந்தவர்களில் ஐந்து பேர் ஆஷா (70), டோடா (65), சாந்தி தேவி (65), அரவிந்த் (6) மற்றும் ஹல்லார் (6) என்பது தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்