அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும் வியாழன் அன்று வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடத் திட்டமிட்டுள்ளார்.
இந்தியர்களின் பிரபல பண்டிகைகளில் தீபாவளிக்கு சிறப்பான இடமுண்டு. எனவே, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தீபாவளியை அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும் வியாழக்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் உள்ள தனது அலுவலகத்தில் தீபாவளியைக் கொண்டாட இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை வெள்ளை மாளிகையும் உறுதிப்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு வெள்ளை மாளிகையில் கொண்டாடும் மூன்றாவது தீபாவளி கொண்டாட்டம் இதுவாகும். வெள்ளை மாளிகையில் தீபாவளி கொணடாட்டம் குறித்த கூடுதல் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்தை ஒபாமா 2009 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
2 mins ago
தமிழகம்
12 mins ago
இணைப்பிதழ்கள்
29 mins ago
இணைப்பிதழ்கள்
40 mins ago
தமிழகம்
51 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago