அமராவதி
தெலுங்குதேச கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆதிநாராயண ரெட்டி இன்று பாஜகவில் இணைந்தார்.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 23-ஐ மட்டுமே அந்த கட்சி கைப்பற்றியது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் தெலுங்கு தேசத்துக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 22 தொகுதிகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது.
இதன் தொடர்ச்சியாக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நிர்வாகிகள பலர் அந்த கட்சியில் இருந்து விலகி பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.ஜி. வெங்கடேஷ், சி.எம். ரமேஷ், சுஜனா சவுத்ரி, காரிகாபதி மோகன் ராவ் ஆகியோர் பாஜகவுக்கு அணி மாறினர். இதுபோலவே வேறு சில மாவட்ட நிர்வாகிகள் பாஜகவிலும், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலும் இணைந்தனர்.
இந்தநிலையில் தெலுங்குதேசம் சார்பில் ஆந்திராவில் 3 முறை ஜமலடுகு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவரும், முன்னாள் அமைச்சருமான ஆதிநாராயண ரெட்டி பாஜகவில் இணைந்தார்.
பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். கடந்த மாதம் 22-ம் தேதி தெலுங்குதேசம் கட்சியில் இருந்து விலகிய அவர் ஓய்எஸ்ஆர் காங்கிரஸில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் பாஜகவில இணைந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஆன்மிகம்
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago