‘‘எனது தந்தை விரைவில் வீடு திரும்புவார்’’ - கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை

By செய்திப்பிரிவு


புதுடெல்லி
எனது தந்தை விரைவில் வீடு திரும்புவார் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கூறினார்.

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 15 நாட்களாக சிபிஐ காவலில் ப.சிதம்பரம் இருந்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் முன் நடந்து வருகிறது. ப.சிதம்பரத்தை 14 நாட்கள் (வரும் 19-ம் தேதிவரை) நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் கூறுகையில் ‘‘எனது தந்தை ப.சிதம்பரத்துக்கு நீதிமன்ற காவல் வழங்கியதில் எந்த நியாயமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் என காரணம் கூறி, நடந்தவற்றுக்காக இந்த நடவடிக்கை. இந்த வழக்கில் சிபிஐ இன்னமும் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யவில்லை. சிபிஐயின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்காது. எனது தந்தை மிக விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது.’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்