பாகிஸ்தான் விவகாரத்தில் மோடி தலைமையிலான அரசு தோல்வி யடைந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மீம் அப்சல் டெல்லியில் நேற்று கூறியதாவது:
காஷ்மீர் எல்லையில் பாகிஸ் தான் ராணுவம் தொடர்ந்து சண்டை நிறுத்தத்தை மீறி வருகிறது. இதை தடுப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்துவிட்டது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானின் அத்துமீறல்களை அடக்குவோம் என்று மோடி கூறி னார். ஆனால் அவரது ஆட்சியில் இதுவரை உறுதியான நடவடிக்கை கள் எடுக்கப்படவில்லை.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் உயிரிழந்துள் ளார். அதே நேரத்தில் ரஷ்யாவின் உஃபா நகரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீபுடன் பிரதமர் மோடி கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்தியா மீது அணுஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட் டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுக்கிறார். ஆனால் மத்திய அரசு மழுப்பலாக பதில் அளித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
28 mins ago
இந்தியா
3 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
வாழ்வியல்
4 hours ago