பாகிஸ்தான் ராணுவம், எல்லையில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் நவுஷேரா பகுதியில் சர்வதேச எல்லையில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்றிரவு (வெள்ளி இரவு) 9.25 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இரவு 11.45 மணி வரை தாக்குதல் நீடித்திருக்கிறது. இந்திய தரப்பில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ இல்லை" என்றார்.
ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே பாகிஸ்தான் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 9-ம் தேதி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
விளையாட்டு
39 mins ago
தமிழகம்
39 mins ago
தொழில்நுட்பம்
1 hour ago
சினிமா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
வணிகம்
1 hour ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
உலகம்
2 hours ago