கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் டி.எம்.எஸ் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு நேற்று முன் தினம் காலை 11.30 மணிக்கு பள்ளி வழக்கம்போல் செயல்பட் டுக்கொண்டிருந்த போது, பள்ளி வளாகத்தில் திடீரென சிறுத்தை புகுந்தது. இதனை கண்ட மாணவர்களும், ஆசிரியர்களும், அலறி அடித்து கொண்டு ஓடினர்.
சிறுத்தை பள்ளி அலுவலக அறையில் புகுந்தபோது அறையை மூடிவிட்டனர்.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மஞ்சுநாத் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். சிவமொக் காவில் இருந்து வனத்துறை அதிகாரி தனலட்சுமி தலைமை யில் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இரவு 9 மணி யளவில், வில் அம்பு மூலம் சிறுத் தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். சிறுத்தை மயக்கம் அடைந்தது. இதையடுத்து அறையின் கதவை திறந்து, வனத்துறை ஊழியர்கள் சிறுத்தையை இரும்புக் கூண்டு க்குள் அடைத்தனர்.
சிறுத்தை 12 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிடிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago