மத்தியப் பிரதேசத்தின் 'வியாபம்' வாரியம் நடத்திய தேர்வு மூலம் காவல் உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வயது பெண் ஒருவர் இன்று (திங்கள்கிழமை) காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தற்கொலையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறும்போது, "அனாமிகா ஷிகாவர் (25), இவர் அண்மையில் 'வியாபம்' வாரியம் நடத்திய தேர்வு மூலம் காவல் உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். போலீஸ் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்றுவந்தார்.
இந்நிலையில், இன்று காலை பயிற்சி அகாடமிக்கு அருகாமையில் இருந்து ஏரியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், அனாமிகா திருமணமானவர். அவர் வியாபம் மூலம் தேர்வாகி இருந்தாலும். பணியைப் பெற அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவில்லை. அவர் தங்கியிருந்த எந்த ஒரு தற்கொலை குறிப்பும் இடம் பெறவில்லை. அந்த அறைக்கு சீல் வைத்துள்ளோம். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
36 mins ago
இந்தியா
47 mins ago
சினிமா
48 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
9 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
சுற்றுலா
2 hours ago
கல்வி
1 hour ago
தமிழகம்
3 hours ago
சுற்றுலா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago