சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ஊழல் புகாரில் சிக்கியுள்ள ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு விசா விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவி செய்தார். மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ததாக சுஷ்மா ஸ்வராஜ் ஒப்புக்கொண்டார்.
இதைக் கண்டித்து சுஷ்மா ஸ்வராஜ் வீடு முன்பு காங்கிரஸ் கட்சியினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் பதவி விலகக் கோரி டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர்.
விசா விவகாரத்தில் லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவியதால் காங்கிரஸ் தொடர்ந்து பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
11 hours ago
சினிமா
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
13 hours ago