விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் அலுவலகம் திறப்பு

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் முதல்வர் முகாம் அலுவலகத்தை நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா சென்றார். அங்கு முதல்வர் அலுவலகத்தை அவர் திறந்து வைத்து பேசியதாவது: இன்றோடு நான் முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டில் பல இன்னல்களை இந்த அரசு சந்தித்துள்ளது. நிரந்தர தலைநகரம் இல்லாத காரணத்தால், தற்போது முதல்வர் அலுவலகம் ஹைதராபாத்தில் இயங்குகிறது. எனவே, விஜயவாடாவில் முகாம் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த முதல்வர் அலுவலகம் வாரத்துக்கு 3 நாட்கள் செயல்படும். தேவைப்பட்டால் 5 நாட்களாக நீட்டிக்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

உலகம்

19 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

35 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

57 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்