மனித உரிமை ஆணைய தற்காலிக தலைவர் சிரியக் ஜோசப்

By செய்திப்பிரிவு

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீதிபதி சிரியக் ஜோசப் நேற்று பொறுப்பேற்றார்.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான இவர் 2013-ம் ஆண்டு மே 27-ம் தேதி ஆணையத்தின் உறுப்பினராக சேர்ந்தார்.

இதன் தலைவராக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிக் காலம் இந்த மாதம் 11-ம் தேதியுடன் முடிந்தது. புதிய தலைவர் நியமிக் கப்படும் வரை அந்த பொறுப்பை ஜோசப் ஏற்பார். இதற்கான ஒப்பு தலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார்.

தனது 5 ஆண்டு பதவிக்காலத்தில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் பாலகிருஷ்ணன்.

பாலகிருஷ்ணன் பதவிக்காலத் தில் ஆணையம் சாதனை அளவாக 4 லட்சத்து 93 ஆயிரத்து 445 வழக்குகளை பதிவு செய்தது.இவற்றில் தானாக முன்வந்து பதிவு செய்த 599 வழக்குகளும் அடங்கும். 4 லட்சத்து 64 ஆயிரத்து 79 வழக்குகளை தீர்த்துவைத்தது.

2242 வழக்குகளில் 68 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 172 ரூபாயை நிவாரணமாக வழங்க பரிந்துரைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

5 hours ago

ஆன்மிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்