தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீதிபதி சிரியக் ஜோசப் நேற்று பொறுப்பேற்றார்.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான இவர் 2013-ம் ஆண்டு மே 27-ம் தேதி ஆணையத்தின் உறுப்பினராக சேர்ந்தார்.
இதன் தலைவராக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிக் காலம் இந்த மாதம் 11-ம் தேதியுடன் முடிந்தது. புதிய தலைவர் நியமிக் கப்படும் வரை அந்த பொறுப்பை ஜோசப் ஏற்பார். இதற்கான ஒப்பு தலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கியுள்ளார்.
தனது 5 ஆண்டு பதவிக்காலத்தில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் பாலகிருஷ்ணன்.
பாலகிருஷ்ணன் பதவிக்காலத் தில் ஆணையம் சாதனை அளவாக 4 லட்சத்து 93 ஆயிரத்து 445 வழக்குகளை பதிவு செய்தது.இவற்றில் தானாக முன்வந்து பதிவு செய்த 599 வழக்குகளும் அடங்கும். 4 லட்சத்து 64 ஆயிரத்து 79 வழக்குகளை தீர்த்துவைத்தது.
2242 வழக்குகளில் 68 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரத்து 172 ரூபாயை நிவாரணமாக வழங்க பரிந்துரைத்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
49 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
உலகம்
5 hours ago
ஆன்மிகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago