இடதுசாரி கட்சிகளை இணைப்பதே முதல் பணி: பிரகாஷ் காரத் திட்டம்

By செய்திப்பிரிவு

பிஹார் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைத் தோற்கடிக்க‌ ‘ஜனதா பரிவார்' கட்சிகளை இணைக்க முயன்றுகொண்டிருக்கும் சமயத் தில், ‘இடதுசாரி கட்சிகளை இணைப் பதே எங்களின் முதல் பணி’ என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இடதுசாரி கட்சிகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி பிஹார் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

ஆறு கட்சிகள் சேர்ந்து ‘ஜனதா பரிவார்' அமைக்க முயன்று வருவதை நாங்களும் அறிந்தோம். முதலில் அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டு அனைவரும் இணையட்டும். பின்பு, நாங்கள் அதில் இணையலாமா வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்வோம்.

சட்டமன்றத் தேர்தலை எதிர் கொள்வது குறித்து ஆலோசிக்க ஜூன் 9 மற்றும் 10ம் தேதிகளில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்