பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிராகப் புதிய கட்சி தொடங்க கன்சிராம் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்சிராமின் குடும்பத்தினர் ஆரம்பம் முதலே மாயாவதியை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். கன்சிராமின் இளைய சகோதரர் தல்பரா சிங், பகுஜன் சங்கர்ஷ் என்ற கட்சியை நடத்தி வருகிறார். அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
கன்சிராம் காட்டிய பாதையில் இருந்து மாயாவதி விலகிவிட்டார். அவர் மீதான அதிருப்தி காரணமாக ஏராளமான தலைவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி வருகிறார்கள். 2017-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு புதிதாக கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளோம். கன்சிராம் பிறந்த இடம் பஞ்சாப் மாநிலம், அவர் வாழ்ந்த இடம் உத்தரப் பிரதேசம். இரு மாநிலங்களிலும் புதிய கட்சி போட்டியிடும். கன்சிராமின் கொள்கைகளை பரப்புவதே எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
வணிகம்
37 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago